கடந்த செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 24) அதிகாலை 3.45 மணியளவில் யூ டோங் சென் வீதி மற்றும் அப்பர் கிராஸ் ஸ்ட்ரீட் சந்திப்பில் ஒரு டாக்ஸி மற்றும் கார் விபத்தில் சிக்கியது. இதில் ஓட்டுனர் மற்றும் இரண்டு பயணிகளும் அருகில் இருந்தவர்கள் உதவியுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது 62 வயதான டாக்ஸி ஓட்டுநரும், 27 மற்றும் 29 வயதுடைய இரண்டு பயணிகளும் சுயநினைவு அடைந்தனர்.
இந்த விபத்து குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து இதுதொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்தின் ComfortDelGro வாகனமும் தெரு விளக்கு கம்பத்தில் மோதி நிற்பதை காணலாம்.
ஊடக கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில், ComfortDelGro இன் குழுவின் தலைமை நிறுவன தகவல் தொடர்பு அதிகாரி டம்மி டான் கூறுகையில், தங்களுடைய நிறுவனமும் ஒட்டுனர்கள் மற்றும் பயணிகளுடன் தொடர்பில் இருப்பதாக கூறினார்.
ஒரு பயணி மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற்று திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார். அதே நேரத்தில் டாக்ஸி ஓட்டுநரும், மற்றொரு பயணியும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.