கார் நிறுத்துமிடம், வாகனங்கள், உடற்பயிற்சி நிலையங்களில் நாசவேலை – 4 பேர் கைது

4 teens, aged 13-14, arrested over vandalism of Punggol multi-storey car park & fitness corner
Credit: Shin Min Daily News

சிங்கப்பூரில் மற்றவர்களின் சொத்துக்களை வேண்டுமென்றே சேதப்படுத்திய சந்தேகத்தின்பேரில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

13 முதல் 14 வயதுக்கு இடைப்பட்ட அவர்கள், அடுக்குமாடி கார் நிறுத்துமிடம், சில வாகனங்கள் மற்றும் பொங்கோலில் உள்ள உடற்பயிற்சி நிலைய உபகரணங்களை சேதப்படுத்தியதற்காக கைது செய்யப்பட்டனர் என்று ஷின் மின் டெய்லி நியூஸ் தெரிவித்துள்ளது.

தன் 105 கிலோ எடை சாதனையை முறியடிக்க முனைப்பு காட்டும் 60 வயது இளைஞர்… முன்மாதிரியாக திகழும் அமைச்சர் க.சண்முகம்!

நேற்று நவம்பர் 13 ஆம் தேதி நள்ளிரவு 2.40 மணியளவில் பிளாக் 325A சுமங் வாக்கில் நாசவேலை குறித்து தகவல் கிடைத்ததாக போலீசார் தெரிவித்தனர்.

கார் நிறுத்துமிடத்தின் ஒவ்வொரு மாடியிலும் எழுத்து மூலம் நாசவேலையில் அவர்கள் ஈடுப்பட்டதாக ஷின் மின் டெய்லி கூறியுள்ளது.

அதோடு மட்டுமல்லாமல் வாகனங்களிலும் அவர்கள் வண்ண சாயம் மூலம் ஸ்பிரே செய்து நாசம் செய்துள்ளனர்.

போலீஸ் விசாரணைகள் நடந்து வருகின்றன.

புதிதாக திறக்கப்பட்ட தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் பாதை ரயில் நிலையங்கள் – அலைமோதும் மக்கள் கூட்டம்