தைப்பூசம் என்பது உலகெல்லாம் கட்டிக்காக்கும் அன்னை பராசக்தி பரமசிவன் மைந்தன் முருகப் பெருமானுக்கு கொண்டாடப்படும் விழாவாகும்.
மேலும், தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும், இதில் முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம் என்பர்.
இந்நிலையில், சிங்கப்பூரில் இந்த ஆண்டு தைப்பூசத்தில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு அனுமதிச் சீட்டு வரும் டிசம்பர் 29 ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்படும் என்று இந்து அறக்கட்டளை வாரியம் அறிவித்துள்ளது.
தைப்பூசம், அடுத்த ஆண்டு (2020) பிப்ரவரி 8-ம் தேதி (சனிக்கிழமை) கொண்டாடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அனுமதிச் சீட்டுகளை ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவில் மற்றும் ஸ்ரீ தண்டாயுதபாணி கோவிலிலும் பெறலாம்.
கூடுதல் விவரங்கள் அறிய: https://thaipusam.sg/