கோலாகலமான முறையில் நடந்து முடிந்த ‘The Voice of Legends’ நிகழ்ச்சி!

The Voice of Legends Show ended up with going well

சிங்கப்பூரில் ‘The Voice of Legends’ நிகழ்ச்சி கோலாகலமான முறையில் நடந்து முடிந்தது.

சிங்கப்பூரில் ‘The Voice of Legends’ சாதனையாளர்களின் ஒருமித்த சங்கமம் மற்றும் அவர்களின் நேரடி இன்னிசைக் கச்சேரி நிகழ்ச்சி கோலாகலமான முறையில் கடந்த ஜூலை 19ம் தேதி சன்டெக் சிட்டி அரங்கில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தது. அந்த அளவிற்கு இந்நிகழ்ச்சியை காண ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.

இந்நிகழ்ச்சியில் சின்ன குயில் பாடகி சித்ரா, எஸ்.பி பாலசுப்ரமணியம் மற்றும் கே.ஜே யேசுதாஸ் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். பார்வையாளர்களின் செவிகளுக்கும் இன்ப விருந்தாய் இந்நிகழ்ச்சி அமைந்தது. அனைவரும் மகிழ்ச்சியுடன் இதனை கண்டுகளித்தனர்.

இந்நிகழ்ச்சியை சிறப்பான முறையில் கார்த்திக் அவர்களின் Noice and Grains குழுவினர் தொகுத்து வழங்கினர். இந்த நிகழ்ச்சி விரைவில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.