சிங்கப்பூரில் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட மூதாட்டி உட்பட மூன்று பேர் மரணம்!

Three patients died Covid19
Pic: Today/File

சிங்கப்பூரில் COVID-19 கிருமித்தொற்று காரணமாக மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் (MOH) நேற்று (செப்டம்பர் 22) தெரிவித்துள்ளது.

65 வயதான ஆடவர் ஒருவர் கிருமித்தொற்று காரணமாக நேற்று உயிரிழந்தார், தடுப்பூசி போட்டுக்கொள்ளாத அந்த ஆடவருக்கு நீரிழிவு நோய் உள்ளிட்ட சுகாதாரப் பிரச்சினைகள் இருந்ததாக கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூரை சேர்ந்த மல்யுத்த வீரர் WWE அறிமுக போட்டியில் அபார வெற்றி!

இறந்தவர்களில் மற்றொருவர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட 90 வயது மூதாட்டி ஆவார், அவருக்கு பக்கவாதம் உள்ளிட்ட சுகாதாரப் பிரச்சினைகளைக் இருந்ததாகவும்,  நேற்று முன்தினம் (செப்டம்பர் 21) அவர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களில் மூன்றாவது நபர் 50 வயது ஆடவர். அவர் தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், நேற்று முன்தினம் மரணஞ அவருக்குச் சுகாதாரப் பிரச்சினை எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது‌‌.

சிங்கப்பூரில் COVID-19 கிருமித்தொற்று காரணமாக ஏற்பட்ட இறப்புகளின் மொத்த எண்ணிக்கை தற்போது 68ஆக உயர்ந்துள்ளது.

கோவிட்- 19 சம்பவத்தால் பிரபல உணவகம் தற்காலிகமாக மூடல்!