துவாஸ் தீ விபத்து: 3 ஊழியர்கள் உயிரிழப்பு – 5 பேர் ஆபத்தான நிலையில்…

Tuas explosion 3 workers dead
(Photo: SCDF/ Facebook)

துவாஸ் தொழில்துறை கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர் என்று வேலையிட பாதுகாப்பு மற்றும் சுகாதார ஆணையர் (WSH) Silas Sng இன்று தெரிவித்துள்ளார்.

மேலும் 5 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் வந்தடைந்த Sinovac கோவிட்-19 தடுப்பூசிகள் – இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை!

அதே நேரத்தில் இரண்டு ஊழியர்கள் குணமடைந்து வெளியேறியதாக திரு Sng கூறியுள்ளார்.

32E துவாஸ் அவென்யூ 11இல் ஏற்பட்ட விபத்து, எளிதில் தீப்பற்றிக்கொள்ளக்கூடிய துகள்கள் வெடிப்பால் ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இந்த துகள், உருளைக்கிழங்கு மாவு பவுடர் (potato starch powder) என்றும் அவர் மேலும் கூறினார், அது Stars Engrg என்ற நிறுவனத்தால் உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகிறது.

துவாஸ் பகுதியில் தீ – 8 பேர் தீ காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி!

துவாஸ் தொழில்துறை கட்டடத்தில் தீ: உதவிக்கு விரைந்து சென்ற வெளிநாட்டு ஊழியர்கள்