சிங்கப்பூரில் 4 வயது சிறுமியை கொலை செய்து சடலத்தை அப்புறப்படுத்தியதாக இரண்டு பேர் மீது குற்றச்சாட்டு..!

Two to be charged with murder of 4-year-old girl, disposal of body
Two to be charged with murder of 4-year-old girl, disposal of body (Photo: Daily Times)

சிங்கப்பூரில் 4 வயது சிறுமியை கொலை செய்து சடலத்தை அப்புறப்படுத்தியதாக, 33 வயது ஆண் மற்றும் 25 வயது பெண் இருவரும் இன்று (ஜூலை 25) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட உள்ளனர் என்று சிங்கப்பூர் காவல் படை (SPF) தெரிவித்துள்ளது.

இதில் அந்த 25 வயதான பெண் சிறுமியின் தாய் என்று காவல்துறை (Biological mother) செய்தி வெளியீட்டில் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை 65 மசூதிகளில் நடைபெறும் – முன்பதிவு கட்டாயம்..!

மேலும் தனது குற்றத்தை மறைக்க குழந்தையின் உடலை அப்புறப்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் 30 வயது பெண் மீது குற்றம் சாட்டப்படும்.

இதில் கொலைசெய்யப்பட்ட அந்த 4 வயது குழந்தை கடந்த திங்கள்கிழமை மாலை 5.36 மணியளவில் காணவில்லை என காவல்துறை தெரிவித்துள்ளனர்.

அதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மூலம், சிறுமி இறந்துவிட்டதாக காவல்துறை கண்டறிந்தது, மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மூன்று சந்தேக நபர்களை அடையாளம் கண்டுள்ளனர்.

கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்கள் இருவரும் மரண தண்டனையை எதிர்கொள்ள நேரிடும்.

மேலும், அவர்கள் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

இதையும் படிங்க : வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் அடுத்த மாதம் முதல் கொரோனா இருக்காது.!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg
?? Sharechat  https://sharechat.com/tamilmicsetsg