அப்பர் தாம்சன் சாலையில் உள்ள செல்லப் பிராணிக் கடையில் தீ..!

Upper Thomson Road fire at pet store
(Photo: Google Streetview, Wellfond Pets Thomson)

அப்பர் தாம்சன் சாலையில் உள்ள செல்லப் பிராணிக் கடை ஒன்றில் நேற்று சனிக்கிழமை (ஏப்ரல் 10) தீ விபத்து ஏற்பட்டது.

197 அப்பர் தாம்சன் சாலையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து சிங்கப்பூர் குடிமை பாதுகாப்பு படைக்கு (SCDF) இரவு 1.15 மணியளவில் தகவல் கொடுக்கப்பட்டது.

சிங்கப்பூரில் அலுவலக இடத்தை குறைக்கும் DBS குழுமம்!

பின்னர் அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் வளாகத்திற்குள் நுழைந்து தண்ணீர் ஜெட் கருவியை பயன்படுத்தி தீயை அணைத்தனர்.

மேலும், அங்கிருந்த 19 நாய்க்குட்டிகளை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர் என்று SCDF கூறியுள்ளது.

விபத்தில் வேறு எந்தவித காயங்களும் யாருக்கும் ஏற்படவில்லை.

தீயணைப்பு நடவடிக்கை நடந்து கொண்டிருக்கும்போது, கடைக்கு வெளியே காப்பாற்றப்பட்ட நாய்க்குட்டிகளை கவனித்து கொள்ள உதவிய சில வழிப்போக்கர்களுக்கு SCDF நன்றி தெரிவித்துள்ளது.

அந்த கடையில் இருந்த ஈரப்பதம் நீக்கும் இயந்திரத்திற்கும் தீக்கும் சம்பந்தம் இருக்கலாம் என கூறப்படுகிறது.

மேலும் தீக்கான காரணம் என்ன என்பது குறித்த விசாரணை தொடர்கிறது.

விமான பயணங்களை தொடங்க முயற்சி… இந்த நாட்டுடன் சிங்கப்பூர் ஒத்துழைப்பு