இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு செல்லும் விமானங்களின் பட்டியலை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் இன்று (27-09-2020) வெளியிட்டுள்ளது.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள இந்த விமானங்களின் அட்டவணைப்படி, அக்டோபர் மாதம் 1ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு செல்லும் விமானங்களை அறிவித்துள்ளது.
தற்பொழுது வெளியிடப்பட்டுள்ள இந்த விமானங்களில், தமிழகத்திற்கு அதிக அளவிலான விமானங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில், பெரும்பாலான விமானங்கள் திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்தே இயக்கப்படுகின்றன.
இதையும் படிங்க: சிங்கப்பூரில் வேலையின்போது கீழே விழுந்ததில் வெளிநாட்டு ஊழியர்கள் பாதிப்பு – இழப்பீடு கோரி வழக்கு..!
மேலும், அக்டோபர் 1, 5, 12, 19 ஆகிய தேதிகளில் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்தும் சிங்கப்பூருக்கு விமானங்கள் இயக்கப்பட உள்ளன.
இந்த விமானங்களில் சிங்கப்பூரர்கள் மற்றும் சிங்கப்பூர் குடியிருப்பாளர்கள் பயணிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், Long Term Pass, Short Term Pass மற்றும் S Pass Holders சிங்கப்பூர் பயணம் செய்வதற்கு சிங்கப்பூர் அரசிடம் முன் அனுமதி பெற்றிருக்க வேண்டும் என்றும், இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் வருபவர்கள் கொரோனாவிற்கான சோதனை முடிவு நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Bookings are open for phase7 October 2020 schedule of IX from India to Singapore.Tickets could be purchased⏩on our…
Posted by Air India Express on Sunday, September 27, 2020
இதையும் படிங்க: சிங்கப்பூரில் உயிரை மாய்த்துக் கொண்ட தமிழக ஊழியர் – மரணத்தில் எந்த சதிச்செயலும் இல்லை..!