‘வீராசாமி சாலை’ எனப் பெயரிட்ட சிங்கப்பூர் அரசு

veerasamy road singapore
veerasamy road singapore

சிங்கப்பூர் தமிழர்களுக்கு வேலையிடமாக மட்டுமல்லாமல் வாழ்விடமாக மாறியிருக்கிறது. சிங்கப்பூரின் லிட்டில் இந்தியாவில் அதனை தெரிவிக்கும் விதமாக வீராசாமி ரோடு என ஒரு சாலைக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரின் முதல் உள்ளூர் இந்திய மருத்துவர்களில் ஒருவராக டாக்டர் என்.வீராசாமி திகழ்ந்தார். இவரின் நினைவாக 1927ஆம் ஆண்டு சாலைக்கு வீராசாமி ரோடு என்று பெயர் சூட்டப்பட்டது. அதற்கு முன்னர், அந்தச் சாலை ஜாலான் தம்பா என அழைக்கப்பட்டது.

இந்த ரோடு சிங்கப்பூரின் லிட்டில் இந்தியா என்றழைக்கப்படும் வட்டாரத்தில் உள்ளது. இரண்டு சாலைகளுக்கு மட்டுமே பிரபலமான தமிழர்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.

அவற்றுள் ஒன்று வீராசாமி ரோடு. மற்றொன்று சந்தர் ரோடு. 1864ஆம் ஆண்டு, வீராசாமி சிங்கப்பூரில் பிறந்தார்.1920களுக்கு முன்னர், சிங்கப்பூரில் வெகுசில மருத்துவர்களே இருந்தனர். அவர்கள் பெரும்பாலானோர் ஐரோப்பியர்கள். உரிமம் பெற்ற முதல் உள்ளூர் இந்திய மருத்துவர்களில் ஒருவராக டாக்டர் என்.வீராசாமி விளங்கினார். சிங்கப்பூர் ரோச்சோர் ரோட்டில் அவருடைய மருத்தகம் அமைந்திருந்தது.