சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் அவர்களுக்கு COVID-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கம்போடியா சென்று சிங்கப்பூர் திரும்பியுள்ள அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தனது முகநூல் பக்கத்தில் கூறியுள்ளார்.
இளைஞர்கள் 2 பேரை அடித்து பணம், செல்போன் பறித்த 4 பேர் கைது
அந்நாட்டின் தலைநகர் Phnom Penh இல் நடைபெற்ற ஆசியான் அமைச்சர் கூட்டத்தில் அவர் பங்குகொண்டு நாடு திரும்பியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த இரு தினங்களாக தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் ART சோதனை செய்துகொள்ளுமாறும் அவர் கேட்டுக் கொண்டார். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிப்பும் கேட்டார்.
அடுத்த சில நாட்களில் திட்டமிட்ட நிகழ்வுகளில் தாம் பங்கேற்க முடியாது என்றும், அதற்காக மன்னிப்பும் கேட்டுக்கொண்டார்.
பாலியல் சேவைக்கு பணம்… சிக்கிய யூடியூபர் – சிறையில் அடைத்த சிங்கப்பூர்