தமிழர் திருநாள் வாழ்த்துக்களை கூறிய அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன்..!

Vivian Balakrishnan Pongal wishes (Photo : Vivian Balakrishnan)

புக்கிட் பாஞ்சாங்கில் தமிழர் திருநாள் பொங்கல் கொண்டாட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் கோலாட்டம், மயிலாட்டம் ஆகிய தமிழர் பாரம்பரியக் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

இந்த பொங்கல் நிகழ்ச்சியில் பிரதமர் லீ சியென் லூங் முதன்முறையாக சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் பிரதமர் லீ கலந்துகொண்ட தமிழர் திருநாள் பொங்கல் கொண்டாட்டம்..!

மேலும், வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், புக்கிட் பாஞ்சாங் நாடாளுமன்ற உறுப்பினரும் வடமேற்கு வட்டார மேயருமான தியோ ஹோ பின் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

(Photo : Vivian Balakrishnan)

இந்நிலையில், வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், பெரும் வளம் கொழிக்கும் இந்த இனிய பொங்கல் திருநாளில் அனைத்து குடும்பங்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

(Photo : Vivian Balakrishnan)

அவர் கூறுகையில், “பொங்கல் என்பது நன்றி செலுத்தும் பாரம்பரிய தமிழ் அறுவடை திருநாள். அனைத்து இனத்தை சேர்ந்தவர்கள் மற்றும் வயதினரும் இந்த விழாவை ரசிக்க எங்களுடன் சேர்ந்து கொண்டனர் ” என்றார்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் தமிழின் இலக்கிய நிலை மற்றும் தமிழ் எழுத்தாளர் நிலை….!

மேலும், “இந்த புக்கிட் பஞ்சாங் பொங்கல் கொண்டாட்டங்களில் பிரதமர் லீ, தியோ ஹோ பின் மற்றும் லியாங் எங் ஹ்வா ஆகியோருடன் இணைந்ததில் பெரும் மகிழ்ச்சி” என்றும் குறிப்பிட்டு இருந்தார்.