சிங்கப்பூரில் ஏப்ரல் முதல் இரண்டு வாரங்களுக்கு வெப்பமான வானிலை தொடரும் என்று சிங்கப்பூர் வானிலை ஆய்வு மையம் (MSS) புதன்கிழமை (ஏப்ரல் 1) தெரிவித்துள்ளது.
முந்தைய இரண்டு வாரங்களுடன் ஒப்பிடும்போது அதிக மழை பெய்யும் என்றும் MSS தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : சிங்கப்பூரில் அனுமதியின்றி பொதுக்கூட்டம்; போலீசார் விசாரணை..!
இந்த ஏப்ரல் மாதமானது ஆண்டின் வெப்பமான மாதங்களில் ஒன்றாகும் என்றும் தெரிவித்துள்ளது.
மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் தினசரி வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் முதல் 34 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினசரி அதிகபட்ச வெப்பநிலையானது, மேகமூட்டம் இருக்கும் நாட்களில் 35 டிகிரி செல்சியஸை எட்டும்.
பெரும்பாலான நாட்களில் பிற்பகலில் இடியுடன் கூடிய மழை எதிர்பார்க்கப்படுகிறது.
ஒட்டுமொத்தமாக, சிங்கப்பூரின் பெரும்பாலான பகுதிகளில், ஏப்ரல் முதல் இரண்டு வாரங்களுக்கு மழைப்பொழிவு இயல்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க : சிங்கப்பூரில் இலவசமாக தொலைக்காட்சி சேனல்கள் வழங்கும் சிங்டெல்..!