கிளெமென்டியில் உள்ள கடையில் பல முறை கடிகாரங்களைத் திருடிய பெண்மணி – காணொளி

Elderly woman caught taking clocks multiple times from Clementi shop
(Photo: @sgfollowsall on Instagram)

சிங்கப்பூரில் வயதான பெண்மணி ஒருவர் கிளெமென்டி அவே 3இல் உள்ள அக்கம்பக்கம் கடையில் இருந்து கடிகாரங்களைத் திருடும் காணொளி வலைத்தளங்களில் பரவி வருகிறது.

கடை உரிமையாளரின் மகள் @sgfollowsall என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு சமர்ப்பித்த தகவலின்படி, இந்த செயல்கள் கிட்டத்தட்ட ஒவ்வொரு வார இறுதியிலும் பல முறை கேமராவில் பிடிபட்டுள்ளது.

கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட இரு மால்களில் அலைமோதிய மக்கள் கூட்டம்!

விசித்திரமான விஷயம் என்னவென்றால், இந்த வயதான பெண் அலாரம் கடிகாரங்கள் அல்லது கை கடிகாரங்கள் போன்றவற்றை மட்டுமே எடுத்துள்ளார்.

கடையின் CCTV காட்சிகளின்படி, பரபரப்பான நேரத்தின் போது இந்த சம்பவங்கள் பொதுவாக மதியம் 12 மணி முதல் மதியம் 2 மணி வரை நடக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கடைக்காரர்கள் மற்ற வாடிக்கையாளர்களிடம் வியாபார நடவடிக்கையில் மும்முரமாக ஈடுபடும் போதுதான் அந்தப் பெண் இந்த செயலில் ஈடுபடுகிறார் என்று தெரிகிறது.

அவர் பகிர்ந்த அந்த காணொளி வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

COVID-19 தடுப்பூசியை முழுமையாக போட்டுக்கொண்ட வெளிநாட்டு ஊழியருக்கு கிருமித்தொற்று!

Verified by MonsterInsights