செங்காங்கில் தந்தையை மர்டர் செய்ததாக மகள் மீதே குற்றச்சாட்டு

indian-origin-singapore-jailed

Singapore: 67 வயதுமிக்க தன்னுடைய தந்தையை கொன்றதாக 31 வயதான பெண் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் பிளாக் 190A ரிவர்டேல் டிரைவின் 15வது மாடியில் கடந்த நவம்பர் 3 ஆம் தேதி இரவு 8 மணி முதல் நவம்பர் 4 ஆம் தேதி அதிகாலை 5.25 மணி வரை ஏதோ ஒருநேரத்தில் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சிகரெட்டு கடத்தலில் ஈடுபட்ட வெளிநாட்டு ஓட்டுநர் கைது

இதில், தந்தை டான் ஆ பேங்கைக் கொலை செய்ததாக மகளான டான் கியு யான் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதனை அடுத்து அவர் மீது விசாரணை மேற்கொள்ள மத்திய போலீஸ் பிரிவில் ஒரு வாரம் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

தனது தந்தையின் கொலையில் தொடர்புடைய சந்தேகத்தில் டான் நேற்று நவம்பர் 4 ஆம் தேதி காலை கைது செய்யப்பட்டார்.

குற்றம் நிரூபணமானால் டான் மரண தண்டனையை எதிர்கொள்ள நேரிடும்.

உணவு விநியோக ஓட்டுனர்கள் மாதம் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள்? – S$5,000 வரை சம்பளம்