புறப்பட தயார் நிலையில் இருந்த இரயில் கதவுகளை வலுக்கட்டாயமாக திறக்க முயன்ற பெண் !

A woman who tried to open the train doors, while Train ready to take off

சிங்கப்பூர் லிட்டில் இந்தியாவின் இரயில் நிலையத்தில் புறப்பட தயார் நிலையில் இருந்த இரயிலின் கதவை பெண் ஒருவர் வலுக்கட்டாயமாக திறக்கும் காணொளி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இந்த காணொளியில் சிவப்பு வண்ண டீ- சர்ட் அணிந்த பெண் ரயில் தளத்தின் கதவுகளைப் வலுக்கட்டாயமாக திறக்கிறார். இரயில் நிலைய தளத்தின் கதவு திறந்த பின்னர், இரயிலின் கதவைத் திறக்க அந்த பெண் முற்படுகிறார்.

தொடர்ந்து அந்த பெண்மணி இரயில் கதவுகளை திறக்க முற்படும் நிலையில் ரயில் நிலைய அதிகாரி ஒருவர் அந்தப் பெண்ணுக்கு உதவி செய்ய முன் செல்கிறார்.

அதன் பின்னர், இரயில் கதவுகள் திறந்த பின்பு அந்தப் பெண்மணி உள்ளே செல்கிறார். இந்த பெண்ணின் அறிவற்ற செயலைக் கடுமையாக பலர் கண்டித்து வருகின்றனர்.

இதுபோன்று பொதுமக்களுக்கு இடையூறு தரும் செயல்களில் ஈடுபடுவது சட்டப்படி குற்றம் என்பதை அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும்.