உட்லண்ட்ஸில் பேருந்து, கார் மோதி கோர விபத்து: இருவர் மரணம் – 8 பேர் மருத்துவனையில் அனுமதி

உட்லண்ட்ஸில் பேருந்து, கார் மோதி கோர விபத்து: இருவர் மரணம் - 8 பேர் மருத்துவனையில் அனுமதி
SGRV FRONT MAN/Facebook

உட்லண்ட்ஸில் இன்று செப்.1 காலை டவர் டிரான்சிட் பேருந்தும் காரும் மோதியதில் இருவர் உயிரிழந்தனர்.

உட்லண்ட்ஸ் அவென்யூ 4 மற்றும் 9 சந்திப்பில் நடந்த விபத்தில், இன்று காலை 6:10 மணிக்கு உதவி வேண்டி அழைப்பு வந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) தெரிவித்தது.

இதில் சம்பவ இடத்திலேயே கார் ஓட்டுநர் உயிரிழந்ததாகவும் மேலும் ஒன்பது பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு வந்து இதை செய்வது மிக தவறு… சிங்கப்பூர் ஆடவரை கைது செய்த போலீஸ்

காயமடைந்த அந்த ஒன்பது நபர்களில் இருவர் படுகாயமடைந்ததாகவும், அவர்கள் Khoo Teck Puat மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் Lianhe Zaobao தெரிவித்துள்ளது .

பேருந்து, சந்திப்பின் வலது பக்கம் திரும்பியதாகவும் கார் நேராக வந்து மோதியதாக சீன நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இருவர் மரணம்

32 வயதான ஆண் கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே இறந்ததாக SCDF உறுதி செய்தது.

மேலும், 37 வயதான பேருந்து ஓட்டுநர் மற்றும் எட்டு பயணிகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அதில் 53 வயதுடைய பெண் பயணி ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

போலீஸ் விசாரணைகள் நடந்து வருகின்றன.

சிங்கப்பூர் சாங்கி விமான நிலைய குழுமத்துடன் Jetstar நிறுவனம் பேச்சுவார்த்தை