சிங்கப்பூரில் ஷா பிளாசாவில் தவறி விழுந்து இந்திய தொழிலாளி உயிரிழந்தார்..!

பாலேஸ்டியர் சாலையில் உள்ள ஷா பிளாசாவில் இந்திய தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.

கடந்த வியாழக்கிழமை (நவம்பர் 14) பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டபோது இந்திய நாட்டை சேர்ந்தவர் ஒருவர் உயிரிழந்தார், என்று மனிதவள அமைச்சகம் (MOM) சனிக்கிழமை இன்று தெரிவித்துள்ளது.

ஷா பிளாசாவின் முகவரி – 360 பாலேஸ்டியர் சாலையில், நிலை 1-லிருந்து அடித்தளம் 1இல் வீழ்ந்து 30 வயதான நபர் உயிரிழந்தார், என்றும் MOM கூறியுள்ளது.

அடையாளம் காணப்படாத இந்த தொழிலாளி, எக்ஸ்பிரஸ் 21 இல் பணிபுரிந்தார் என்றும், இந்நிறுவனம் மின் பொறியியல் மற்றும் கட்டிடங்களுக்கான கட்டமைக்கப்பட்ட கேபிளிங் திட்டங்களுக்கு வேலை செய்யும் நிறுவனம் என்றும் கூறப்படுகிறது.

விசாரனைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், பணியிடத்திற்குள் அனைத்து பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் MOM தெரிவித்துள்ளது.