ரோட்டில் அடித்துக்கொண்டு உருண்ட வெளிநாட்டு ஊழியர்கள் 4 பேர் கைது: “மானத்தை வாங்காதீங்க பா” – சக ஊழியர்கள் காட்டம் (வீடியோ)

ரோட்டில் அடித்துக்கொண்டு உருண்ட வெளிநாட்டு ஊழியர்கள் 8 பேர் கைது - "மானத்தை வாங்காதீங்க பா" சக ஊழியர்கள் காட்டம்
Stomp

கெலாங் லோரோங் 8ல் நடந்த சண்டையை தொடர்ந்து போலீசாரால் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 6) நடந்த இந்த சம்பவத்தின் வீடியோவில், முதலில் சாலையோரத்தில் பலர் வாக்குவாதத்தில் ஈடுபடுவது தெரிகிறது.

வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றிச்செல்லும் லாரி… அடுத்த ஆண்டு முதல் புதிய நடைமுறைகள் எதிர்பார்ப்பு

இப்படி போய்க்கொண்டிருந்த வாக்குவாதத்தில், ஒரு நபர் திடீரென மற்றொருவரின் முகத்தில் குத்தியதால் சலசலப்பு ஏற்பட்டு, அதை அடுத்து சுமார் எட்டு பேர் ஈடுபட்ட சண்டையாக மாறியது.

அன்று மாலை 6.18 மணிக்கு சண்டை ஏற்பட்டது குறித்த புகார் வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இதில் 29 மற்றும் 41 வயதுக்குட்பட்ட நான்கு ஆண்கள் ஒழுங்கற்ற நடத்தைக்காக கைது செய்யப்பட்டுள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர்.

இது குறித்த விசாரணைகள் நடந்து வருகின்றன.

சமூக ஊடங்களில் எதைவேனாலும் இனி எழுத முடியாது – சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் புதிய மசோதா