சிங்கப்பூரில் இந்தாண்டு பணியிட மரணங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்துள்ளன.பணியிடங்களில் போதுமான பாதுகாப்பு இல்லாததால் ஊழியர்கள் பரிதாபமாக மரணிக்கின்றனர்.
இந்நிலையில் சிங்கப்பூர் காவல்துறை,சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப்படை ஆகியவற்றுடன் சேர்ந்து தேசியப் பாதுகாப்பு,பாதுகாவல் குழுமத்தின் உறுப்பினர்கள் பணியிடங்களில் பாதுகாப்பை மேம்படுத்துவதில் தொண்டாற்றுகின்றனர்.
அவர்கள் ஆற்றும் தொண்டினை அங்கீகரித்து,பாராட்டும் வகையில் ஆர்ச்சர்ட் ஹோட்டலில் நேற்று விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.சிங்கப்பூர் உள்துறை துணை அமைச்சர் சுன் ஷூவெலிங் நிகழ்ச்சியில் பங்கேற்று விருதுகளை வழங்கினார்.
மொத்தம் 57 பாதுகாப்புக் குழு உறுப்பினர்கள் தனிச்சிறப்பான தனிநபர் விருதையும்,மற்ற 80 உறுப்பினர்கள் குழுமம்,தனிநபர்,பாராட்டு விருதுகளைப் பெற்றனர்.இந்தாண்டு மிரட்டல் பரிசோதனை ஒருங்கிணைந்த ஏற்பாட்டு முறை விருது 18 நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது.
சிறப்புப் பாராட்டு,தனிச்சிறப்பு விருது 8 நிறுவனங்களுக்கும்,உயர் பாராட்டு மற்றும் பாராட்டு விருது இதர 10 நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்டன.சிங்கப்பூர் காவல்துறை மற்றும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை இந்த விவரங்களை கூட்டறிக்கையில் தெரிவித்தன.
சிங்கப்பூரில் பாதுகாவல் நிர்வாகியாக பணிபுரியும் தமிழரசன் செல்லக்கண்ணு தனிநபர் விருது பெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.