தந்தையை கொன்றதாக பிடிபட்ட 19 வயது மகன் – வழக்கறிஞர்களை சந்திக்க அனுமதி

Man, 22, charged with breaking into NTU dorm
Pic: Today

சிங்கப்பூர்: தந்தையை கொன்றதாக அவரின் 19 வயதான மகன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

யுஷூன் அவென்யூ 4ல் தனது தந்தை எடி சீ வீ டெக் (47) என்பவரை கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட 19 வயதான சைலஸ்னர் சீ ஜீ கை, தற்போது அவரின் வழக்கறிஞர்களை சந்திக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூருக்கு வந்து திருட்டு வேலையில் ஈடுபட்டவர்கள் சொந்த நாட்டுக்கு திரும்பினர்

இன்று (நவம்பர் 23) காலை வீடியோ லிங்க் மூலம் சைலஸ்னர் நீதிமன்றத்தில் ஆஜரானார் என்று தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

அவர் மனநல சோதனை அமைப்பின் மதிப்பீட்டை முடித்துள்ளார் எனவும் சொல்லப்பட்டுள்ளது.

அக்டோபர் 1, 2022 அன்று கைது செய்யப்பட்டார் அவர். அனுமதி வழங்கப்பட்டால், சைலஸ்னர் தனது சட்ட ஆலோசகரை அணுகுவது இதுவே முதல் முறையாக இருக்கும்.

சைலஸ்னர் அடுத்த ஆண்டு 2023 ஜனவரி 31, அன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முதல் “பஸ்-ஸ்டாப் ஜிம்”… காத்திருக்கும் நேரத்தை இனி வீணடிக்க வேண்டாம்.. ஒர்க் அவுட் செய்து ரீசார்ஜ் பெறுங்கள்!