சிங்கப்பூர் சென்று திரும்பியவர், மாயமானதாக புகார் !!

சிங்கப்பூர் சென்று திரும்பியவர், திருச்சி விமானநிலையத்தில் மாயமானதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுகோட்டை அருகிலுள்ள குடல்வாசல் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் ஜெயகுமார்(28). இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்தார்.

விடுமுறையில் செப்டம்பர் 12- ஆம் தேதி பிற்பகல் ஏர் இந்தியா விமானத்தில் திருச்சி வருவதாக, தனது உறவினர்களிடம் ஜெயகுமார் தெரிவித்திருந்தார். இதையடுத்து அவரை அழைத்துச் செல்ல உறவினர்கள் விமான நிலையம் வந்து இரவு வரை காத்திருந்தும், ஜெயகுமாரை அவரது உறவினர்கள் பார்க்க முடியவில்லை.

தொடர்ந்து சிங்கப்பூரிலுள்ள அவரது நண்பர்களிடம் விசாரித்த போது, செல்வக்குமார் திருச்சி வந்துவிட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாயமான தனது மகனை கண்டுபிடித்துத் தரக் கோரி, விமான நிலையக் காவல் நிலையத்தில் ராஜேந்திரன் புகார் அளித்தார். இதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிந்து ஜெயக்குமாரை தேடி வருகின்றனர்.

Source: தினமணி