இந்தியில் பேச வற்புறுத்திய நபரிடம், ‘தமிழில் பேசலாமா’ என்று பதிலடி கொடுத்த டாப்ஸி..!

கோவாவில் நடைபெற்று வரும் சர்வதேச திரைப்பட விழாவின் நடிகை டாப்சி பன்னு கலந்து கொண்டு, கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் பதிலளித்து கொண்டிருந்தார்.

அப்போது, ஒருவர், டாப்சியிடம் இந்தி மொழியில் பேசும்படி வலியுறுத்தினார். அதற்கு டாப்சி, “இங்கு இருப்பவர்கள் அனைவருக்கும் இந்தி தெரியுமா?” என்று கேட்டார். அதற்கு பெரும்பாலானோர் “இல்லை” என்று பதிலளித்தனர்.

இருப்பினும், அந்த நபர் தொடர்ந்து, ‘நீங்கள் ஒரு பாலிவுட் நடிகை. எனவே இந்தியில்தான் பேச வேண்டும்’ என்று தெரிவித்தார்.

இதையடுத்து, “நான் தமிழ், தெலுங்கு திரைத்துறையிலும் நடித்து வருகிறேன். எனவே, நான் உங்களிடம் தமிழில் உரையாடலாமா?” என்று டாப்சி கேட்டவுடன், அங்கு கூடியிருந்த பார்வையாளர்கள் சத்தமாக ஆர்ப்பரித்தவுடன், கேள்வி எழுப்பிய நபர் அமைதியாக உட்கார்ந்துவிட்டார்.

https://www.facebook.com/MKS4CM/videos/465502840760921/?t=1

இதைத்தொடர்ந்து தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த கேள்விகளை விடுத்து நடிப்புத்திறன் சார்ந்த கேள்விகளை கேட்குமாறும் டாப்சி பார்வையாளர்களிடம் வலியுறுத்தினார்.