மனதை உலுக்கும் புகைப்படம்! கேன்சரால் பரிதவிக்கும் குழந்தை – பக்க பலமாக துணை நிற்கும் அன்பு அக்கா!

புற்றுநோய் எவ்வளவு கொடுமையானது…! அந்த புற்றுநோய் ஒரு குழந்தைக்கு ஏற்பட்டால்…

சமீபத்தில், ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியான பதிவு உலகையே உலுக்கியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்ப்பவர்கள் ஒரு நிமிடம் கண்ணீர் விடுவது உறுதி.

ஒரே தாய் வயிற்றில் பிறந்த இரண்டு குழந்தைகளில், ஒன்று மட்டும் அனுபவிக்கும் கொடுமை பெரிது என்றால், அதை கூடவே இருந்து பார்க்கும் மற்றொரு குழந்தை அதை விட பாவம். என்ன நோய்? எப்படி வந்தது? என்ற விளக்கம் எல்லாம் தெரியவில்லை.

ஆனால் தனது தம்பிக்கு ஏதோ பிரச்சனை. அவனுக்கு உடல்நலம் சரியில்லை. ஏதோ கஷ்டப்படுகிறான். அவனை தனியாக விட்டு விட கூடாது அவன் கூடவே நாம் இருக்க வேண்டும். 4 வயதில் அந்த சிறுமிக்கு தெரிந்தது இது தான்.

லுகேமியா (Leukemia) – எலும்பு மற்றும் ரத்தத்தில் வரும் புற்றுநோய் வகை. இதனால் பாதிக்கப்பட்ட தனது தம்பிக்கு தூண் போல் நிற்கும் சிறுமியின் புகைப்படம் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டது. அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

;

சிகிச்சைக்காக அந்த சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் இது. இந்த வகையான புற்றுநோய் பாதிக்கப்பட்டால் தொடர்ந்து ரத்த வாந்தி எடுப்பார்கள். பாதி நேரம் பாத்ரூமில் இருக்க வேண்டிய கொடுமை நிலை ஏற்படும். இந்த நிலைமையில் இருக்கும் தனது தம்பிக்கு ஆறுதலாக முழு நேரமும் மருத்துவமனையில் இருக்கிறாள் அந்த சிறுமி.