India reports its first case of Wuhan virus : இந்தியாவின் தென் மாநிலமான கேரளாவில் ஒருவருக்கு வூஹான் வைரஸ் தொற்று இருப்பதாக இந்திய அரசு இன்று வியாழக்கிழமை (ஜன. 30) உறுதிப்படுத்தியுள்ளது. இது இந்திய நாட்டின் முதல் வூஹான் வைரஸ் சம்பவம் ஆகும்.
இதில் பாதிக்கப்பட்ட அந்த நபர் சீனாவில் வூஹான் பல்கலைக்கழக மாணவர் என்று இந்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : வூஹான் வைரஸ்; சிங்கப்பூரில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் 4 முகமூடிகள்..!
மேலும், நோயாளி சீரான நிலையில் உள்ளதாகவும், மருத்துவமனையில் தனிமையில் வைக்கப்பட்டுள்ளதாகும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன், சுகாதாரத்துறை அமைச்சர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சீனாவில் வேகமாக பரவி வரும் இந்த மர்மமான கொரோனா வைரஸ், 170 உயிர்களை இதுவரை பலி வாங்கியுள்ளது. மேலும் ஆயிரக்கணக்கானோர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க : வூஹான் வைரஸ்; தமிழ் உள்ளிட்ட மொழிகளில் தொடர்ந்து விழிப்புணர்வு ஆலோசனை..!
ஒவ்வொரு நாடும் தங்கள் நாட்டுக்கு வரும் பயணிகள் அனைவரையும் தீவிரமாக கண்காணித்து வருகிறது. தீவிர மருத்துவ பரிசோதனைக்கு பிறகே பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.