கொரோனா வைரஸை மீறி தன்னுடைய குழந்தையை ஆரோக்கியமாக பெற்றெடுத்த தாய்..!

சீனாவில் கொரோனா வைரஸ் என்னும் COVID-19 பாதிக்கப்பட்டுள்ள கர்ப்பிணி பெண்மணி ஒருவர் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

ஷான்சி பகுதியில் 33 வயதான டான் என்ற பெண்ணுக்கு இந்த கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கடந்த 5-ஆம் தேதி தெரியவந்தது.

இதையும் படிங்க : COVID-19; புதிய 5 நபர்களை உறுதிப்படுத்தியது சிங்கப்பூர் – மேலும் 1 குணமடைந்துள்ளார்..!

இதனை தொடர்ந்து, இவர் கடந்த 10-ஆம் தேதி அன்று குழந்தையை ஆரோக்கியமாக பெற்றெடுத்துள்ளார். இந்த சம்பவம் அனைவரையும் மகிழ்ச்சி கலந்த ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும், தாய் இந்த வைரஸ் கிருமியால் பாதிக்கப்பட்டு இருந்தாலும் குழந்தைக்கு கொரோனா தொற்று இல்லை என்றும், அதே வேளையில் அந்த குழந்தை ஆரோக்கியமாக உள்ளது என்றும் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம், இந்த COVID-19 வைரஸ் தாயின் மூலமாக தன்னுடைய குழந்தைக்கு நேரடியாகப் பரவாது என்று தெரியவந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க : கொரோனா வைரஸ்; பள்ளிவாசலுக்கு தொழுகைக்காக வரும் முஸ்லிம்களுக்கு ஆலோசனை..!