சிங்கப்பூரில், 20 வயது நிரம்பிய ஒரு இளைஞனை மற்ற நாட்டு இளைஞர்கள் நேருக்கு நேர் மோதி ஜெயிப்பது கடினம், ஏன் தெரியுமா?

Singapore Army (Photo: MINDEF)

சிங்கப்பூரில் இருபது வயது நிரம்பிய ஒரு இளைஞனை மற்ற நாட்டு இளைஞர்கள் நேருக்கு நேர் மோதி ஜெயிப்பது என்பது மிக கடினமான ஒன்று.

சிங்கப்பூர்வாசிகளின் பிள்ளைகள் அனைவரும் 18 வயதை அடையும் போது இரண்டு ஆண்டுகள் கட்டாய ராணுவ பயிற்சியில் ஈடுபட வேண்டும். இதற்கு தேசிய சேவை (National Service) என்று பெயர். இதில் அனைவரும் கண்டிப்பாக பங்கு கொள்ள வேண்டும். பணக்கார வீட்டு பிள்ளைகள், ஏழை வீட்டு பிள்ளைகள் என்ற பாகுபாடெல்லாம் கிடையாது.

ஏன் பிரதமர் வீட்டு பிள்ளையாக இருந்தாலும் சரி, இந்த பயிற்சிகளை மேற்கொண்டே ஆக வேண்டும். இந்த பயிற்சி காலங்களில் அவர்களுக்கு தற்காப்பு கலைகளும், போர் யுத்திகளும் இரவு பகல் பாராத கடுமையான பயிற்சிகளோடு தினம்தோறும் வழங்கப்பட்டு கொண்டே இருக்கும்.

இந்த பயிற்சியில், ஞாயிற்று கிழமை மற்றும் பொது விடுமுறை தினங்களை தவிர்த்து ஏனைய நாட்களில் அவர்கள் வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

பயிற்சி முடிந்து வருகைத்தரும் ஒவ்வொரு வாலிபனும் கைதேர்ந்த ஒரு போர்வீரனாகத்தான் வெளியே வருவான். பயிற்சியில் இருக்கும் காலக்கட்டத்தில் இவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை மாத ஊதியமாக வழங்கப்படுகிறது.

இந்த இளைஞர்களால் துப்பாக்கியால் சுட தெரியும், பீரங்கிகளை இயக்க தெரியும், வானூர்தி ஓட்டத்தெரியும், அவசர காலங்களில் எப்படி செயல்படுவது என்பது பற்றி தெரியும். மேலும், முதலுதவி பற்றிய அறிவு அவர்களுக்கு உண்டு.

அத்தியாவசிய தேவைகளாக குடிநீர், உணவுப்பொருட்கள், மின்சாரம் போன்ற விஷயங்களில் பிற நாடுகளை சார்ந்திருக்கும் ஒரு சிறிய நாடு சிங்கப்பூர்.

இன்றைக்கு பொருளாதார வளர்ச்சியிலே உலக நாடுகளுக்கெல்லாம் சவால் விடக்கூடிய் அளவுக்கு வளர்ந்து நிற்பதற்கு அந்த நாட்டின் கட்டுக்கோப்பான குடிமக்களும், நல்ல அரசாங்கமும் தான் காரணம் என்றால் அது மிகையாகாது.

நன்றி – பிரேம்குமார் ரவீந்திரன்.