“அற்புதமான பிரிட்டன் தமிழ் சமூகமே” என்று தமிழர்களுக்கு பொங்கல் வாழ்த்து கூறிய பிரிட்டன் பிரதமர்..!

UK Prime Minister praises British Tamils in Thai Pongal message

UK Prime Minister praises British Tamils in Thai Pongal message: பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தமிழர்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள காணொளியில், “அற்புதமான பிரிட்டன் தமிழ் சமூகமே” என்று கூறி தன் உரையை தொடங்கிய போரிஸ் ஜான்சன், பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துவிட்டு, “மிகவும் சுவையான இனிப்பு பொங்கலை அனைவரும் சுவைத்து மகிழ்வீர்கள் என்று நம்புகிறேன்” என்றார்.

மேலும் அவர் கூறுகையில், “அறுவடை நாளை கொண்டாடும் இந்த நாளில் பிரிட்டன் வளர்ச்சிக்காக தமிழர்கள் ஆற்றிய பங்களிப்பையும் நான் கொண்டாட விரும்புகிறேன். வர்த்தகம், பொருளாதார துறையில் பணியாற்றுபவர்கள் மற்றும் எங்கள் பள்ளிகளில் குழந்தைகளுக்கு பாடம் சொல்லி கொடுக்கும் ஆசிரியர்கள், மருத்துவமனையில் பணிபுரிபவர்கள் என அனைவரின் பங்களிப்பும் உண்மையான மாற்றத்தை உருவாக்கியுள்ளது” என்றார்.

இந்த பொங்கலைப் போல வரும் ஆண்டில் மகிழ்ச்சி, இன்பம் ஆகிய அனைத்தும் வாழ்வில் பொங்கட்டும் என்று தமது பொங்கல் வாழ்த்துச் செய்தியில் பிரதமர் போரிஸ் ஜான்சன் குறிப்பிட்டுள்ளார்.