இந்தியா – தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி மழை குறுக்கிட்டதால் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் தென்ஆப்பிரிக்கா அணி டி20 போட்டியில் 1-1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்தது.
இதனைத் தொடர்ந்து, இவ்விரு அணிகளுக்கு இடையேயான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று தொடங்கியது.
டாஸ் வென்று பேட் செய்த இந்திய அணி தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா மற்றும் மாயாங்க் அகர்வால் களமிறங்கினர். விக்கெட் இழப்பின்றி சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா சதம் அடித்தார்.
முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 59.1 ஓவர்களுக்கு விக்கெட் இழப்பின்றி 202 ரன்கள் எடுத்துள்ளது. ரோகித் சர்மா 115 ரன்களுடனும் மற்றும் மயங்க் அகர்வால் 84 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.