நெதர்லாந்தின் டச்சு ஜூனியர் சர்வதேச போட்டியான ஹார்லெமில் நடைபெற்ற U-19 ஆண்கள் ஒற்றையர் தொடக்க சுற்றில் இளம் இந்திய ஷட்டில் வீரர்களான ரவி மற்றும் ரித்விக் சஞ்சீவி சதீஷ்குமார் ஆகியோர் தங்களது வெற்றிகளைப் பதிவு செய்துள்ளனர்.
இந்த போட்டியில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் ரித்விக், சிங்கப்பூர் வீரர் ஹியுன் லீயை (Zhiyuan Lee) சந்தித்தார்.
இதையும் படிங்க : சிங்கப்பூரில் 12 வயது மாணவர் உட்பட 3 புதிய COVID-19 பாதிக்கப்பட்ட நபர்கள் உறுதி..!
இந்த ஆட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த ரித்விக் 21-12, 21-11 என்ற கணக்கில் சிங்கப்பூரின் ஹியுன் லீயை வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் ரவி 21-11, 21-8 என்ற நேர்செட்டில் இந்தோனேஷியாவின் டெகோ செட்யா அத்மஜாவை வீழ்த்தினார்.
இதையும் படிங்க : மதுரையின் ஜில் ஜில் ஜிகர்தண்டா இனி சிங்கப்பூரிலும்…!