தென் ஆப்பிரிக்காவை வச்சி செய்யும் இந்தியா; 3வது டெஸ்ட் போட்டியிலும் படுமோசமான பேட்டிங்..!!

IND vs SA 3rd Test Match

தென் ஆப்பிரிக்கா – இந்தியா இடையேயான தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வென்றுள்ள இந்தியா, இந்த டெஸ்ட்டிலும் வெற்றி வாய்ப்பை உறுதி செய்துள்ளது.

முதலில் பேட்டிங் செய்த இந்தியா மொத்த விக்கெட்டுகளையும் இழந்து 497 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. அடுத்ததாக விளையாட தொடங்கிய தென் ஆப்பிரிக்கா 162 ரன்களில் மொத்த விக்கெட்டுகளையும் இழந்தது.

தென் ஆப்பிரிக்கா ஃபாலோ ஆன் கேட்க இந்தியாவும் ஒப்புக்கொண்டதால் இன்று இரண்டாவது கட்ட ஆட்டம் நடைபெற்றது. இதில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு தென் ஆப்பிரிக்கா 132 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. இந்தியாவை விட 203 ரன்கள் குறைவாக இருக்கும் தென் ஆப்பிரிக்காவுக்கு இன்னும் இரண்டு விக்கெட்டுகளே மிச்சம் உள்ளன.

நாளை காலை தொடரும் ஆட்டத்தில் மீத இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தி இந்தியா தென் ஆப்பிரிக்காவை ஒயிட் வாஷ் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.