ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரில் ஜி 20 மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி கலந்து கொண்டார். அவர் அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட பல்வேறு நாட்டின் தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதனை அடுத்து பிரதமர் மோடி சிங்கப்பூர் பிரதமர் லீ சென் லூங் அவர்களை சந்தித்து பேசினார். பிரதமர் லீ சென் லூங் சமீபத்திய தேர்தல் வெற்றி குறித்து பிரதமர் மோடிக்கு வாழ்த்து கூறினார். இருவரும் இருநாட்டு ஒற்றுமை குறித்து பேச்சு வார்த்தை நடத்தினர்.
மேலும், இருநாடுகளுக்கும் இடையே நீண்ட கால சிறந்த உறவுவையும், ஒற்றுமையையும் குறித்து தன்னுடைய அதிகாரபூர்வ வலைத்தள பக்கத்தில் சிங்கப்பூர் பிரதமர் லீ பதிவிட்டு வாழ்த்து கூறி இருந்தார்.