துவாஸ் -யில் அடுத்த தலைமுறைக்கான பிரம்மாண்ட துறைமுக இரண்டாம் கட்ட வளர்ச்சி சீரமைப்பு பணிகள் ஜூலை 4 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக தொடங்கியதாக சிங்கப்பூர் கடல்சார் மற்றும் துறைமுக ஆணையம் (MPA) அறிவித்துள்ளது.
போக்குவரத்து நிலை உயர் அமைச்சர் லாம் பின் மின் அவர்கள் தலைமையில் இதன் துவக்க விழா நடைபெற்றது. இதில் சீரமைப்பு பணிகளுக்கான தண்ணீர் புகாத கன்டெய்னர் இயந்திரம் பொருத்தப்பட்டது.
இந்த மிக பெரிய கன்டெய்னர் மூலம் தண்ணீர் புகாத வகையில் நீர்நிலை உள்ளே பணிகளை மேற்கொள்ள முடியும்.
2 ஆம் கட்ட பணி, 4 திட்ட பணிகளாக சுமார் 387 ஹெக்டேர் பரப்பளவில் மேற்கொள்ளப்பட உள்ளது.