சிங்கப்பூர் 200 ஆண்டு நிறைவை நினைவு கூறும் வகையில் வெளியிடப்பட்ட, $20 நோட்டுகளை பரிமாற்றம் செய்ய, பொதுமக்கள் செப்டம்பர் 16 (திங்கள்கிழமை) முதல் அக்டோபர் 13 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் நாணய ஆணையம் (MAS), கூடுதலாக இரண்டு மில்லியன் பண நோட்டுகளை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் சேவையை தொடங்குவதாக தெரிவித்துள்ளது.
go.gov.sg/mas என்ற இணைய முகவரியில் சென்று சிங்கப்பூர் குடிமக்களுக்கும், நிரந்தர குடியிருப்பாளர்களுக்கும் விண்ணப்பம் செய்யலாம்.
கண்டிப்பாக ஒவ்வொரு விண்ணப்பதாரரும் 10 நோட்டுகள் வரை மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.