இத்தனை நாளா இங்கத்தானடா இருக்கோம்… இது தெரியாம போச்சே என்று உங்களை நிச்சயம் எண்ண வைக்கும் செய்தியாக இது இருக்கப் போகிறது.
சிங்கப்பூரின் லிட்டில் இந்தியாவில் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படுகிறது.
இதில், பல அணிகள் கலந்து கொண்டு விளையாடுகின்றன. மாதம் ஒருமுறை இறுதிப் போட்டி நடத்தப்பட்டு கோப்பை வழங்கப்படுகிறது.
இம்முறை நடந்த கிரிக்கெட் போட்டியில், ஜாலி கிரிக்கெட்டர்ஸ் அணியும், பெங்கால் டைகர்ஸ் அணியும் மோதின. இதில், ஜாலி கிரிக்கெட்டர்ஸ் அணி கோப்பையைக் கைப்பற்றியது.
விருப்பமுள்ள நபர்கள் இத்தொடரில் பங்கேற்கலாம்.