சிங்கப்பூர்- இந்தியா ‘ஹேக்கத்தான்’ நிகழ்ச்சியில் 10,000 வெள்ளி பரிசுத் தொகையை தட்டி சென்று மாணவர்கள் அசத்தல்.
இந்தியா மற்றும் சிங்கப்பூர் நாடுகள் இணைந்து நடத்தும் ‘ஹேக்கத்தான்’ தொழில்நுட்ப போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி மற்றும் சென்னை ஐ.ஐ.டி.யின் 56வது பட்டமளிப்பு விழா ஆகியவை சென்னை கிண்டியில் உள்ள ஐ.ஐ.டி. வளாகத்தில் (செப்.30) நடைபெற்றது.
இதில் உணர்கருவிகளைக் கொண்ட தொட்டிச் செடிகள் மூலமாக காற்றைச் சுத்திகரிக்கும் தீர்வை முன்வைத்த மாணவர்களுக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது.
முதல் பரிசு தொகையாக 10,000 வெள்ளியை மாணவர்கள் தட்டிச் சென்றனர்.