ஆபாசப் படங்கள் மற்றும் காணொளிகள் ஆகியவற்றை ‘ஒன்லிஃபேன்ஸ்’ என்னும் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்பவர்கள், வெளிநாட்டிலிருந்து செயல்பட்டாலும் அவர்கள் சிங்கப்பூரில் உள்ள சட்டத்தை மீறுவதாக எடுத்துக்கொள்ளப்படும்.
ஆபாசப் படங்களை பதிவிறக்கம் செய்து அதனை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்பவர்களும் கைது செய்யப்படுவர் என்று எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் ஆபாசக் காணொளிகள் மற்றும் படங்கள் ஆகியவற்றை அதனுள் பதிவிறக்கம் செய்து சிங்கப்பூருக்குள் நுழையும் சிங்கப்பூரர், வெளிநாட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று சிங்கப்பூர் நிர்வாக பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியர் யூஜின் டான் கூறினார்.
அவற்றின் மூலம் பணம் சம்பாதித்தாலும், சம்பாதிக்காவிட்டாலும் குற்றச்செயல்களாகக் கருதப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.