Eunos தொழிற்துறை கட்டிடத்தில் 500 அட்டைப்பெட்டிகள் வரி செலுத்தப்படாத சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து இருவர் மீது செவ்வாய்க்கிழமை (ஜனவரி 25) குற்றம் சாட்டப்பட்டது.
வார இறுதியில் சிங்கப்பூர் சுங்கத் துறையினர் நடத்திய சோதனையின் போது 41 மற்றும் 60 வயதுடைய அவர்கள் இருவரும் சிக்கினர்.
தடுப்பூசி போட்டுக்கொள்ளாத நபர்கள் பிப். 1 முதல் இதில் கலந்துகொள்ள அனுமதி
கடந்த ஞாயிற்றுக்கிழமை தொழில்துறை கட்டிடத்தை சிங்கப்பூர் சுங்க அதிகாரிகள் கண்காணித்துக்கொண்டிருந்தனர், அப்போது அதன் உள்ளே இருவர் நுழைந்ததைக் கண்டனர்.
இதைத் தொடர்ந்து, அடையாளம் கண்டுகொண்ட அதிகாரிகள் அங்கு சோதனை செய்தனர். அப்போது 500 அட்டை பெட்டிகளில் வரி செலுத்தப்படாத சிகரெட்டுகள் கேன்வாஸ் பைகளில் அடைக்கப்பட்டதை அவர்கள் கண்டறிந்தனர்.
மொத்த சரக்கு மற்றும் சேவை வரி (GST) ஏய்ப்பு செய்யப்பட்ட தொகை முறையே S$68,320 மற்றும் S$5,110 என கூறப்பட்டுள்ளது.
“செம்ம ஹேப்பி” – சிங்கப்பூரில் 2023 முதல் இந்த ஊழியர்களுக்கு அதிகரிக்கும் சம்பளம்!!