சீன மாகாணமான ஹைனானில் உள்ள டான்ஜோ நகரில், சீன மூத்த அதிகாரியின் வீட்டின் அடித்தளத்தில் 13.5 டன்களுக்கும் அதிகமான தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக சீன ஊடகம் Wenxuecity தெரிவித்துள்ளது.
கண்டெடுக்கப்பட்ட இந்த தங்கக் கட்டிகளின் மதிப்பு சர்வதேச வர்த்தக விலைகளின்படி, S$ 884.8 மில்லியன் மதிப்புடையவை என்று கூறப்படுகிறது.
58 வயதான ஹைகோவின் கம்யூனிஸ்ட் கட்சி குழுவின் செயலாளராக இருந்த சாங் குய் என்ற அதிகாரி லஞ்சம் வாங்கியதாக சந்தேகிக்கப்பட்ட RMB268 பில்லியன் (S$ 51.7 பில்லியன்) ஐ சீன அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
某个人民的仆人落马了!儋州市原市长,三亚市原市委书记,海口市原市委书记张琦(安徽人,中共党员现年57岁)九月六日落马。其住宅内起获黄砖金条金砖数量惊人,现金13.5吨。另查获帐面来路不明资金2680亿,多套千余平方的豪宅……。又一次刷新了记录,令吾辈叹为观止,贫穷再一次限制了我们的想象力! pic.twitter.com/6hcgKsaFwE
— 铁血党奴 (@SoloWindRider) September 24, 2019
சாங் -ன் ஒருங்கிணைந்த நிகர மதிப்பு சீனாவின் மிகப்பெரிய தொழிலதிபர் ஜாக் மாவை விட அதிகமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
மேலும், சாங் “பொருளாதார குற்றங்கள்” செய்ததாக நிரூபிக்கப்பட்டால், அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.