அண்மையில் நடைபெற்ற சிங்கப்பூரின் தேசியதின அணிவகுப்பு நிகழ்ச்சியின் போது ஒவ்வொரு சிங்கப்பூரரும் தன் தேசத்தின் மீது எவ்வளவு பற்றுடன் இருக்கிறார்கள் என்பதை உணர முடிந்தது.
சிங்கப்பூர் மக்களுக்கு தேசிய தினம் மட்டும் இந்த ஆகஸ்ட் மாதத்தில் நற்செய்தி அல்ல.பொருள்சேவை வரி உயர்வு காரணமாக அரசாங்கம் மக்களுக்குச் செலவினங்களை சமாளிக்க GST வவுச்சர் வழங்குவதாக அறிவித்திருந்தது.எனவே,ஜிஎஸ்டிவியின் S$700 ரொக்கத் தொகையை பெறுவது மகிழ்ச்சிக்கு கூடுதல் காரணமாக இருக்கும்.
சுமார் 370,000 இளம் சிங்கப்பூரர்கள், அதாவது 2022 GSTV பெறுபவர்களில் நான்கில் ஒரு பகுதியினர் ரொக்கப் பணத்தைப் பெறுவார்கள் என்று MOF தெரிவித்தது.
S$34,000க்கு மேல் சம்பாதித்தாலோ மற்றும் S$21,000 அல்லது அதற்கும் அதிகமான வீட்டு மதிப்பை (AVH) பெற்றிருந்தாலோ GSTV பணப்பரிமாற்றங்களில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள்.
மாதச் சம்பளம் குறைந்தபட்சம் S$2,833 ஆக இருந்தால், அவர்களுக்கு ரொக்கத்தொகை கிடையாது