அல்ஜுனீட் லேனிலுள்ள ஆறாவது மாடி வீட்டில் இன்று வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 19) காலை தீ விபத்து ஏற்பட்டது.
மெழுகுவர்த்தி காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்றும், அந்த பிளாக்கில் இருந்து பதின்மூன்று பேர் வெளியேற்றப்பட்டனர் என்றும் கூறப்பட்டுள்ளது.
இளம்பெண் ஒருவரை கடுமையாக தாக்கிய மூன்று டீன்ஏஜ் பெண்கள் கைது – வீடியோ வைரலானதால் அதிரடி
காலை 7.05 மணியளவில் பிளாக் 3, அப்பர் அல்ஜூனிட் லேனில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) தெரிவித்துள்ளது.
அதன் அருகிலுள்ள வீடுகளில் இருந்து சுமார் 10 பேரை வெளியேற்றியதாகவும் SCDF கூறியுள்ளது. SCDF வருகைக்கு முன்னர் மற்ற மூன்று பேர் தாங்களாகவே சுயமாக வெளியேறினர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரண்டு பேரின் உடல்நிலை சோதனை செய்யப்பட்டது, பின்னர் அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படவில்லை என்றும் SCDF தெரிவித்துள்ளது.
முதற்கட்ட விசாரணையில், அறையில் மெழுகுவர்த்தி எரிந்ததே தீ விபத்துக்குக் காரணம் என நம்பப்படுகிறது.
சாலையில் செல்லும் ஆண்களிடம் விலை பேசும் பெண்கள்… தகாத உறவுக்கு அழைப்பு – சிக்கிய 6 பேர்