சட்டவிரோதமான பந்தய நடவடிக்கைகளில் ஈடுபட்ட சந்தேகத்தின்பேரில் நான்கு பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த புதன்கிழமை (செப். 7) யுஷுன் அவென்யூ 5 அருகே சோதனை நடவடிக்கையை மேற்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெளிநாட்டு ஊழியர்களை பணியில் அமர்த்த தடை – நிறுவங்களுக்கு இனி கடும் நடவடிக்கை தான்: MOM அதிரடி
இதனை அடுத்து பிடிபட்ட அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் அறிக்கையில் தெரிவித்தனர்.
அவர்கள் 56 மற்றும் 71 வயதுடைய இரண்டு ஆண்கள், 71 மற்றும் 83 வயதுடைய மற்ற இரு ஆண்களுக்கு சூதாட்ட சேவைகளை வழங்கியதாக கூறப்படுகிறது.
இந்த சோதனையில் சுமார் S$2,200 ரொக்கம் மற்றும் இரண்டு மொபைல் போன்கள் சாட்சியமாக கைப்பற்றப்பட்டன.