கத்தார் ஏர்வேஸ் விமானம் 352 பயணிகளுடன் நேற்று முன்தினம் (03-02-2020) இரவு கத்தார் தலைநகர் தோஹாவிலிருந்து தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிற்கு வானில் பறந்து கொண்டிருந்தது.
அச்சமயம், அந்த விமானத்தில் இருந்த தாய்லாந்து நாட்டை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி பெண் ஒருவருக்கு திடிரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
இதை அடுத்து, பிரசவ வலியில் துடித்த அப்பெண்ணுக்கு, விமானப் பணிப்பெண்கள் உதவி செய்தனர். அதன் பின்னர் அந்த பெண் (04-02-2020) அதிகாலை 3.00 மணியளவில் அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.
பிறகு, விமானி அவசர மருத்துவ உதவியை கோரியதை தொடர்ந்து, அதிகாலை 3.10 மணியளவில் அந்த விமானம் கொல்கத்தாவில் தரை இறக்கப்பட்டது.
தாயும், சேயும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு, விமானம் தாய்லாந்தை நோக்கி 5.50 மணிக்கு பயணத்தை தொடர்ந்தது.
இந்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்திலும், கூடுதலாக மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.