சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த இரு ஊழியர்களை தூக்கிய போலீஸ் – பரபரப்பான விமான நிலையம்!

"சிங்கப்பூருக்கு வர வேண்டும் என்று இதை செய்யாதீங்க" - சிக்கிய சிவகங்கை ஊழியர் மீது வழக்கு பதிவு

சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்த இரு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.

சிங்கப்பூரிலிருந்து ஸ்கூட் விமானத்தில் வந்த பயணிகளை அதிகாரிகள் வழக்கம் போல சோதனை செய்தனர், அப்போது அதில் ஒருவர் தேடப்படும் குற்றவாளி என தெரியவந்தது.

“மதுரை-சிங்கப்பூர்” பயணிகளுக்கு இன்பச்செய்தி – மீண்டும் சேவையை தொடங்கும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்!

அவர் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பகுதியை சேர்ந்த 31 வயதான பிரகாஷ் என்பதும், இவர் கறம்பக்குடி போலீசாரால் தேடப்படும் குற்றவாளி என்ற தகவலும் தெரியவந்தது.

பின்னர் அவரை கைது செய்த அதிகாரிகள் கறம்பக்குடி போலீசிடம் ஒப்படைத்தனர்.

அதே போல், சிங்கப்பூரில் இருந்து வந்த மற்றொரு ஊழியரும் பிடிபட்டார். வேல்முருகன் (33) என்ற அவர், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியைச் சேர்ந்தவர்.

இவரும் தேடப்படும் குற்றவாளி என்பதை கண்டறிந்த அதிகாரிகள் வேல்முருகனை கைது செய்தனர். பின்னர் இவர் அப்பகுதி போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.

பல்வேறு வழக்குகள் அவர் மீது நிலுவையில் இருப்பதாக போலீசார் கூறியுள்ளனர்.

சிங்கப்பூரில் இருந்து தமிழகம் திரும்பிய ஊழியர்.. கொலை செய்த கொடூர மகன் – சோகத்தில் குடும்பம்