கனடாவுக்கு தற்காலிக வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தேவை – வேலை தேடுவோருக்கு ஒரு நல்ல செய்தி!

கனடா தொழிலாளர் பற்றாக்குறை இனனமும் நீடிக்கிறது. கொரோனா பிரச்சனை ஓரளவுக்கு கட்டுப்பாட்டிற்குள் வந்த பிறகும் தொழிலாளர் பற்றாக்குறையை தீர்க்க இதுவரை தீர்வு எதுவும் எட்டப்படவில்லை.

கனேடிய சிறுதொழில்களில், பாதிக்கும் மேல் தொழிலாளர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளதாக The Canadian Federation of Independent Business – CFIB தெரிவித்துள்ளது. இதனை அந்நாட்டு ஊடகம் லங்கசிறியும் உறுதி செய்துள்ளது.

இந்த தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக பல சிறுதொழில் நிறுவனங்கள் பணிகளுக்காக ஒப்பந்தங்களை ஏற்றுக்கொள்வதை கைவிட்டுள்ளன.

இந்த பிரச்சினையைத் தீர்ப்பதற்கு, தொழிலாளர்களின் ஊதியத்தை உயர்த்துவது மட்டும் போதுமானதாக இருக்காது. அதற்கு பதிலாக தற்காலிக வெளிநாட்டு பணியாளர் திட்டத்தை (Temporary Foreign Worker Program – TFWP)  பயன்படுத்திக்கொள்வது பயனுள்ள இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Canadian Federation of Independent Business கூட்டமைப்பும் இந்த யோசனையை ஆமோதிக்கிறது. தற்காலிக வெளிநாட்டு பணியாளர் திட்டத்தை பயன்படுத்திக்கொள்வதும் நல்ல பலனளிக்கும் என அந்த அமைப்பு கருதுகிறது.

கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக கனடாவில் வேலை செய்யும் வயதில் இருப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது. மாற்றங்கள் கொண்டுவரப்படாவிட்டால்,  இன்னும் 25 வருடங்களில் கனடா, வேலை செய்யும் வயதில் இருப்பவர்களில் பெரும் பகுதியினரை இழந்திருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

தொழில்களில் இத்தகைய காலியிடங்களை நிரப்ப, கனடாவுக்கு அதிக பணியாளர்களை வேகமாக கொண்டு வரும் வகையில் தற்காலிக வெளிநாட்டு பணியாளர் திட்டத்தை மேம்படுத்துமாறும், சரியான இடங்களை பொருத்தமான புலம்பெயர்வோரைக் கொண்டு நிரப்புவதை உறுதி செய்யுமாறும், தனித் தொழில்களுக்கான கனேடிய கூட்டமைப்பு பரிந்துரைத்துள்ளது.

அப்படி மேம்படுத்தப்பட்ட தற்காலிக வெளிநாட்டு பணியாளர் திட்டத்தால், புலம்பெயர்வோர் பல்வேறு துறைகளில் பணிகளைக் கண்டடையவும், நிரந்தர வாழிட உரிமம் பெறுவதற்கும் வாய்ப்புள்ளது.