சென்னை விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் சோதனை செய்யப்படுவது வழக்கம்.
அதன் அடிப்படையில், வெளிநாடுகளில் இருந்து வந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர்.
இந்திய விமான சேவை எப்போது தொடங்கும் ? – இந்திய அரசு விளக்கம்
அப்போது 4 பேர் மீது சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து, அதிகாரிகள் அவர்களை விசாரித்தனர்.
அதில் அவர்கள் முன்னுக்குபின் முரணாக பேசியதால் சந்தேகமடைந்த அதிகாரிகள், அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர்.
அப்போது உடைமைகளில் மரத்தூள் உடைய அட்டை பெட்டிகள் இருந்தன. அவற்றை பிரித்து சோதனை செய்ததில், மரத்தூளுக்குள் தங்கத்தை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டனர்.
அவரிடம் இருந்து இந்திய மதிப்பில் சுமார் ரூ.49 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 147 கிராம் தங்கத்தை அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.
மேலும், அந்த நால்வரின் உடைமையில் இருந்து ரூ.42 லட்சத்து 4 ஆயிரம் மதிப்புள்ள எலக்ட்ரானிக் பொருட்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
100 ஆண்டுகளில் இல்லாத அளவு “கடும் வெள்ளம்” – மலேசியாவில் 5 பேர் பலி, 41,000 பேர் வெளியேற்றம்