சென்னையிலிருந்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வெளிநாடு செல்லவிருந்த 3 விமான பயணிகளிடம் பல்வேறு வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
சுங்கத்துறையினர் வழக்கம்போல பயணிகளை பரிசோதனை செய்தபோது சென்னையை சோ்ந்த 3 பயணிகள் மீது அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
விசாரணையின் போது, அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசியுள்ளனர், பின்னர் அந்த 3 பேரின் உடமைகளை அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அதில் கட்டுக்கட்டாக அமெரிக்க டாலா், குவைத், பக்ரைன், ஓமன் போன்ற வெளிநாட்டு ரொக்க பணம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.
அதன் இந்திய மதிப்பு சுமார் ரூ.55.29 லட்சம் என்றும் கூறப்படுகிறது. பின்னர் அந்த 3 பேரின் பயணத்தை ரத்து செய்த அதிகாரிகள், கைது செய்து விசாரணையும் நடத்தி வருகின்றனர்.