சிங்கப்பூர் ஏற்றுமதி மார்ச் மாதம் அதிகரிப்பு – தங்கம் ஏற்றுமதி வர்த்தகத்தை உயர்த்தியதால் வளர்ச்சி

Enterprise Singapore

சிங்கப்பூர் ஏற்றுமதிகள் மார்ச் மாதத்தில் தொடர்ந்து உயர்ந்துள்ளது. தங்கத்தின் ஏற்றுமதி அதிகரிப்பால் நிகழ்ந்தது என்று வர்த்தக நிறுவனமான என்டர்பிரைசஸ் சிங்கப்பூர் (ESG) திங்கள் கிழமை தெரிவித்தது. எண்ணெய் தவிர்த்து உள்நாட்டு ஏற்றுமதிகள் (NODX) வளர்ச்சி குறைந்து 7.7 சதவீதமாக உள்ளது.கடந்த மாதத்தில் 9.4 சதவீதமாக இருந்தது.

எலக்ட்ரானிக் அல்லாத உள்நாட்டு ஏற்றுமதிகள் மார்ச் மாதத்தில் அதிகரித்து 6.8 சதவீதமாக வளர்ந்தது. அதற்கு முந்தைய மாதத்தில் 8.8 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது ஆகும். சிங்கப்பூரின் Linchpin எலக்ட்ரானிக் தொழில்துறையின் உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதி 11.5% அதிகரித்துள்ளது. இது பிப்ரவரி மாதத்தில் 11.6 சதவீதமாக இருந்தது

நாணயமில்லா தங்கத்தின் அதிக ஏற்றுமதிகளை ESG உயர்த்திக் காட்டியது. இது வருடத்திற்கு 86.5% அதிகமாக இருந்தது. Barclays மூத்த பிராந்திய பொருளாதார நிபுணரான Brian Tan “ அதிகரித்துவரும் மின்னணு ஏற்றுமதிகள் ,சீனாவில் ஊரடங்கு மற்றும் ரஷ்யா – உக்ரைன் போர் நடைபெற்ற போதிலும் உள்நாட்டு ஏற்றுமதிக்கு மார்ச் மாதத்தில் வியக்கும் வகையில் உதவியது.நாணயமற்ற தங்கம் மற்றும் மருந்துகள் நிலையற்ற தன்மை கொண்டவை ” என்று கூறினார்.

சிங்கப்பூரில் பணவீக்கத்தின் இரட்டை தலையீடுகள் இருந்தபோதிலும் உள்நாட்டு ஏற்றுமதிகள் (NODX) நல்ல துவக்கத்தில் இருப்பதாகவும்,மேலும் சீனாவிடமிருந்து இறக்குமதி செய்யப்படும் தேவையும் குறையும் என்று OCBC-ன் பொருளாதார நிபுணர் செலினா குறிப்பிட்டுள்ளார்.