தியோங் பாரு சந்தையில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில். சந்தையில் உள்ள மீன் விற்பனையாளர்கள், தங்களிடம் உள்ள அனைத்து மீன்களையும் அன்றைய தினம் விற்று முடித்தால் மட்டுமே தங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் என தங்களின் கவலைகளை தெரிவித்தனர்
ஆனால், விற்பனை இல்லாதது மட்டும் தங்களை கவலையடையச் செய்யவில்லை என்றும் அவற்றின் இயக்கச் செலவுகளான அதிகரித்து வரும் எரிபொருள் விலைகள் பற்றியும் அதனால் தளவாட நிறுவனங்களில் மீன்களை ஏற்றும் விலை அதிகரித்திருப்பத்தையும் அவர்கள் வேதனையுடன் கூறினர்.
அவர்களின் சில மீன் விநியோகஸ்தர்களான அண்டை நாடுகளில் உள்ள மீனவர்கள் மற்றும் மீன் விவசாயிகள், இயக்கச் செலவுகள் அதிகரித்து வருவதால் விலையை உயர்த்தியுள்ளதாக கூறினார். சிங்கப்பூர் உட்கொள்ளும் மீன்களில் 90 சதவீதத்தை இறக்குமதி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
தாங்கள் தங்களது விலையை உயர்த்த விரும்பவில்லை என்றும் வாடிக்கையாளர்கள் அதை எடுத்துக்கொள்வார்களா என்றாவது பார்க்க வேண்டும் என்றும் கூறினார். தங்கள் மீன்களை குறைந்த விலைக்கு விற்க விரும்புவதாகவும், அவற்றை வைத்திருப்பதை விட. குறைந்தபட்சம் தாங்கள் இழக்கவில்லை என்று வேதனையோடு தெரிவித்தனர்.
உக்ரைனில் நடந்து வரும் போர் காரணமாக எரிபொருள் விலை உயர்ந்து வருவதும் கணிக்க முடியாத வானிலையால் மீனவர்கள் கடலுக்குச் செல்லாமலிப்ருபதும் கடலில் இருந்து பிடிக்கப்படும் மீன்கள் சமீபகாலமாக குறைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இவற்றுள் மீன் தீவண விலையேற்றமும், மீன் விலையேற்றத்தின் காரணங்களில் ஒன்றாகும்.