திருச்சி வந்த பயணியிடம் சோதனை: துணி வடிவில் கொண்டு வரப்பட்ட தங்கம் பறிமுதல்

Singapore Trichy flight

சிங்கப்பூர், UAE மற்றும் மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து திருச்சி விமான நிலையத்திற்கு தினசரி நூற்றுக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர்.

இதில் குறிப்பாக தாயகம் திரும்பும் பயணிகளில் சிலர் தங்கத்தைக் கடத்திவருவது தினசரி சம்பவமாக நம்மால் பார்க்காக்க முடிகிறது.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மற்றும் சாங்கி விமான நிலையத்திற்கு மிக பெரிய போக்குவரத்து சந்தை “இந்தியா”

அந்த வகையில் இன்று (டிச.11) வெளிநாட்டில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் பயணித்தவர்களை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அதில் துணி வடிவில் தங்கத்தை தயார் செய்து ஒட்டி எடுத்துவந்த பயணி ஒருவர் சிக்கினார், அவர் பைக்குள் அது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில், அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்தனர், சுமார் 255 கிராம் எடையுள்ள அதன் மதிப்பு 12 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

பயணியிடம் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

வேலையை விட்டு நிற்பதாக கூறிய வெளிநாட்டு பணிப்பெண்ணை தாக்கியவருக்கு அபராதம்